கும்பாபிஷேகத்தில் இரண்டு பெண்களிடம் தங்க நகை பறிப்பு

59பார்த்தது
தர்மபுரி அடுத்த பழைய தர்மபுரி பகுதியில் நேற்று முன்தினம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழாவில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் திரளாக கலந்து கொண்ட னர். கும்பாபிஷேகம் முடிந்து பொதுமக்கள் மீது புனித தீர்த்தம் தெளிக்கப்பட்ட போது அந்த பகுதியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி பழைய தர்மபுரி பகுதியை சேர்ந்த மலர், பஞ்சவர்ணம் ஆகியோர் கழுத்தில் அணிந்திருந்த தலா 3 பவுன் தங்க நகையை மர்ம நபர்கள் பறித்து சென்றனர். கழுத்தில் அணிந்திருந்த நகைகள் மாயமானதால் அதிர்ச்சியடைந்த மலர், பஞ்சவர்ணம் ஆகியோர் இதுபற்றி தர்மபுரி நகர காவல் நிலையத்தில் நேற்று மாலை புகார் அளித்தனர். அதன்பேரில் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து இந்த 2 பேரிடம் நகை பறிப்பில் ஈடுபட்டவர்கள் யார்.? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்தி