காரிமங்கலத்தில் 14 லட்சத்துக்கு தேங்காய்கள் விற்பனை

608பார்த்தது
காரிமங்கலத்தில் 14 லட்சத்துக்கு தேங்காய்கள் விற்பனை
காரிமங்கலத்தில் செவ்வாய்க் கிழமை தோறும் வாரசந்தை நடப்பது. வழக் கம். அதற்கு முன்னதாக திங்கட்கிழமை மதியம் முதல் தேங்காய் சந்தை நடக்கிறது. நேற்று நடந்த சந்தையில், சுமார் 1 லட் சத்து 25 ஆயிரம் தேங்காய் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இதில் தேங் காய் அளவை பொறுத்து 8 முதல் 13 வரை பல்வேறு ரகங்களில் விற்பனை செய் யப்பட்டது.

தர்மபுரி, அரூர், பாப்பிரெட் டிப்பட்டி, பாப்பாரப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விவசாயிகள் மற்றும் வியா பாரிகள் தேங்காய்களை வாங்கியும், விற்றும் சென்றனர். நேற்று 14 லட்சத்திற்கு தேங்காய் விற்பனை யானது. கடந்த வாரத்தை காட்டிலும் தேங்காய் வரத்து குறைந்து காணப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி