தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாரண்டஅள்ளியில் சட்டவிரோதமாக மதுபானங்கள் பதுக்கி விற்பனை செய்யப்படுவதாக மாரண்டஅள்ளி காவல் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து நேற்று ஜூலை 14 மாலை மாரண்டஅள்ளி, சந்தை வீதி, அமானிமல்லாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது வீட்டில் பதுக்கி வைத்து மதுபானங்களை விற்பனை செய்த மங்கா 70 வயது மூதாட்டி மற்றும் 24 வயது வாலிபர் இளங்கோ ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர் அவர்களிடம் இருந்து 280 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.