சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக பஸ்கள் நிறுத்தம்

82பார்த்தது
தர்மபுரி மாவட்டம், அரூர் பஸ் ஸ்டாண்ட், 3. 62 கோடி ரூபாய் மதிப்பில், நவீன பஸ் ஸ்டாண்டாக மாற்றி அமைக்கும் பணி கடந்த ஓராண்டாக நடந்து வருகிறது.
இதற்காக, பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்த கட் டடங்கள் அகற்றப்பட்டு தற்போது, புதிய கட்டங்கள் கட்டப்பட்டு வரு கிறது. கட்டுமான பணிகள் காரணமாக தற்காலிக பஸ் ஸ்டாண்ட், வர்ணதீர்த்தம் முதல், டி. எஸ். பி. , அலுவ லகம் வரை உள்ள சாலை பகுதியில் செயல்பட்டு வரு கிறது.
இந்நிலையில் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக பஸ்கள் தாறுமாறாக நிறுத் தப்படுகின்றன. இதனால்அச்சாலையில் வரும் இரு சக்கர வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் போக்கு வரத்து நெரிசலில் சிக்கி மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
எனவே, தற்காலிக பஸ் ஸ்டாண்டில் பஸ்களை முறையாக நிறுத்த, சம்மந் தப்பட்ட அதிகாரிகள் நட வடிக்கை எடுக்க, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத் துள்ளனர்.

தொடர்புடைய செய்தி