கம்பைநல்லூரில் வியாபாரி மர்ம சாவு

78பார்த்தது
தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லூர் அடுத்த இருளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்டாலின் (49). இவர் செடிகளுக்கு அடிக்கும் மருந்துகளை விற்பனை செய்து வந்தார். இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். நேற்று காலை, ஸ்டாலின் வழக்கம் போல் வியாபாரத்திற்கு சென்று விட்டார். இதனிடையே ராஜேஸ்வரிக்கு போன் ஒன்று வந்துள்ளது. அதில் பேசிய நபர், ஸ்டாலின் கம்பைநல்லூர் சந்தைப்பேட்டையில் மயங்கிய நிலையில் கிடப்பதாக தெரிவித்தார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர், குடும்பத்தினருடன் அங்கு சென்று பார்த்த போது, ஸ்டாலின் இறந்து கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்து, சம்பவ இடத்துக்கு வந்த வந்த கம்பைநல்லூர் கம்பைநல்லூர் போலீ போலீ சார், ஸ்டாலின் உடலை மீட்டு, பிரேத பரிசோத னைக்காக அரசு மருத் துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஸ்டாலின் உடல்நலக் குறைவால் உயிரிழந்தாரா அல்லது வேறு எதுவும் காரணமா என்ற கோணத்தில் போலீ சார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி