தர்மபுரி மாவட்டம் அரூர் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் சில நாட்களாக விட்டுவிட்டு சாரல் மழை பெய்து வந்தன. நேற்று முதல் இன்று காலை வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டுள்ளது அதன் பின்னர் மாலை 3: 30 மணி முதல் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக அரூர் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.