சீட் பெல்ட் அணிதல் குறித்து விழிப்புணர்வு வாகன பேரணி

2267பார்த்தது
தருமபுரி வட்டார போக்குவரத்து துறை சார்பில் சாலை பாதுகாப்பு மற்றும் சீட் பெல்ட் அணிவதன் அவசியம் குறித்து ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு பேரணி, வட்டார போக்குவரத்து அதிகாரி தாமோதரன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் வட்டார போக்குவரத்து துறை மண்டல துணை இயக்குனர் பிரபாகர் கலந்துகொண்டு ஓட்டுநர்களுக்கு அறிவுரை வழங்கி, பின்னர் ஓட்டுநர்கள் சீட் பெல்ட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு செய்து, 4 சக்கர வாகன பேரணியை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் பங்கேற்று சிறப்பித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி