அரூர் பகுதியில் தக்காளி விலை கிடுகிடு உயர்வு

574பார்த்தது
தர்மபுரி மாவட்டத்தில் அரூர், மொரப்பூர், கம்பை நல்லுார், தீர்த்தமலை, நரிப் பள்ளி, சின்னாங்குப்பம் உள் ளிட்ட பகுதிகளில், 3, 000க்கும் மேற்பட்ட ஏக்கரில், தக்காளி நடவு செய்யப்பட்டுள்ளது. தற்போது, சந்தையில் தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், சாகுபடி விவசா யிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இது குறித்து வியாபாரிகள் கூறியதாவது: அரூரில், கடந்த மாத இறுதியில், 28 கிலோ எடை கொண்ட ஒரு கூடை தக்காளி, 700 முதல், 800 ரூபாய் வரை விற்பனையானது. தொடர்ந்து, 5ல் தக்காளி விலை அதிகரித்து, ஒரு கூடை தக்காளி, 1, 000 ரூபாய் என விற் றது. நேற்று மீண்டும் தக்காளி விலை உயர்ந்து, ஒரு கூடை தக்காளி, 1, 300 என விற்பனையானது.

தொடர் மழையால், செடி களில் தக்காளி அழுகி வரு வதால் அரூரிலுள்ள, தனியார் மண்டிகளுக்கு வரத்து சரிந் துள்ளது. தற்போது திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளால், தேவை அதிகரித்துள்ளதும் - விலை உயர்வுக்கு காரணம் என அவர்கள் கூறினர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி