தேர்தல் பணியில் பாதுகாப்பு 2044 போலீசார் -எஸ்பி தகவல்

54பார்த்தது
தர்மபுரி லோக்சபா தொகுதி தேர்தலில், தி. மு. க. , அ. தி. மு. க. , பா. ம. க. , உட்பட, 24 வேட்பாளர்கள்போட்டியிடுகின்றனர். இத்தொகுதியில்
மொத்தமுள்ள,
1, 805 ஓட்டுச்சாவடிகளில் நாளை மறுநாள் ஓட்டுப்பதிவுநடக்க உள்ளது.
இங்கு அசம்பாவித சம்பவமின்றி, பொதுமக்கள் அச்சமின்றி ஓட்டுபோட, தேர்தல் ஆணையம் நடவடிக்கைஎடுத்துள்ளது. இதையடுத்து, தர்மபுரி லோக்சபா தொகுதியில் தேர்தல் பாதுகாப்பு பணியில், வெளி மாநிலங்களை சேர்ந்த, 634 போலீசார், 110 ஊர்காவல் படையினர் மற்றும் தர்மபுரி மாவட் டத்தை சேர்ந்த, 1, 300 போலீசார் என மொத்தம், 2, 044 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். எனவே, பொதுமக்கள் அச்சமின்றி ஓட் டளித்து, தங்களது ஜனநாயக கடமை ஆற்றலாம் என, தர்மபுரி எஸ். பி. , ஸ்டீபன் ஜேசுபாதம் தெரிவித்துள்ளார்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி