நெல்லை வைரமாளிகை ஹோட்டல் முன்பு சமீபத்தில் பிரபல ரவுடி தீபக் ராஜா படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக இன்று (மே 22) கைது செய்யப்பட்ட 5 பேரும் வாக்குமூலம் கொடுத்துள்ளனர். சாதி ரீதியிலான மோதலே தீபக் ராஜா கொலைக்கு காரணம் எனவும் நவீன் என்பவர் தான் கொலை செய்ததாகவும் கூறினர். இந்த நிலையில் இன்று (மே 26) நவீன் கைது செய்யப்பட்டு, ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கொலைக்கு பயன்படுத்திய காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.