டிடிஎப் வாசன் நாளை விசாரணைக்கு ஆஜராக நோட்டீஸ்

66பார்த்தது
டிடிஎப் வாசன் நாளை விசாரணைக்கு ஆஜராக நோட்டீஸ்
போக்குவரத்து விதிமுறைகளை மீறிய வழக்கில் யூடியூபர் டிடிஎப் வாசன் நாளை (ஜுன் 3) விசாரணைக்கு ஆஜராக மதுரை காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது. ஜாமீனில் உள்ள டிடிஎப் வாசன் 10 நாட்களுக்கு மதுரை காவல் நிலையத்தில் கையெழுத்திட உத்தரவிடப்பட்டிருந்தது. செல்போனில் பேசிய படி கார் ஓட்டிய வழக்கில் நீதிமன்ற உத்தரவுபடி அண்ணாநகர் காவல்நிலையத்தில் கடந்த 3 நாட்களாக கையெழுத்திட்டார். இந்த நிலையில் நாளை தன்னிடம் உள்ள ஆவணங்கள் மற்றும் செல்போனுடன் ஆஜராகுமாறு டிடிஎப் வாசனுக்கு மதுரை அண்ணாநகர் காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

தொடர்புடைய செய்தி