உடல் உறுப்பு கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர் கைது

75பார்த்தது
உடல் உறுப்பு கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர் கைது
மனித உறுப்பு கடத்தலில் ஈடுபட்டு வரும் சர்வதேச மனித கடத்தல் வலைப்பின்னலின் மூளையாக செயல்பட்டவரை கேரள போலீசார் கைது செய்துள்ளனர். பல்லம்கொண்டா ராம் பிரசாத் என்ற பிரதாபன் இந்த மாஃபியாவின் பின்னணியில் இருப்பதாக கூறப்படுகிறது. ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்த பிரதாபன் ஹைதராபாத்தில் உள்ள ஹோட்டலில் வைத்து கைது செய்யப்பட்டதாக கேரள காவல்துறையின் சிறப்பு புலனாய்வுக் குழு தெரிவித்துள்ளது. வெளிநாடுகளுக்கு ஆட்களை கூட்டிச் சென்று சட்டவிரோமாக அவர்களது உடல் உறுப்புகள் விற்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.