உடல்நலம் குன்றிய யானைக்கு 4வது நாளாக தொடர் சிகிச்சை

77பார்த்தது
உடல்நலம் குன்றிய யானைக்கு 4வது நாளாக தொடர் சிகிச்சை
கோவை மாவட்டம் மருதமலை வனப்பகுதியில் உடல்நலம் பாதித்த தாய் யானைக்கு 4வது நாளாக தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இயல்பாக உணவு எடுத்துக்கொள்வதால் இன்று மாலை வனப்பகுதியில் விடுவிக்கப்பட வாய்ப்புள்ளது. கிரேன் மூலம் யானை நிற்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதற்கு தேவையான தண்ணீர், பழங்கள், காய்கறிகள், குளுக்கோஸ் உள்ளிட்டவை கொடுக்கப்படுகிறது.

இந்நிலையில் தாய் யானையின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்து தானாக உணவு உட்கொள்கிறது.
நேற்று அதிகாலை வனப்பகுதிக்குள் சென்ற இதன் குட்டி, இரவு நேரத்தில் பிற யானைகளுடன் தாயை பார்க்க வந்துள்ளது கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. வனப்பகுதிக்குள் உள்ள குட்டியையும் வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி