நாசமான பருத்தி செடிகள்.. விவசாயிகள் வேதனை..

76பார்த்தது
நாசமான பருத்தி செடிகள்.. விவசாயிகள் வேதனை..
தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. முன்னதாக வெயில் காலத்தில் போர்வெல் மூலம் நீர் வைத்து பருத்தி சாகுபடி செய்த நிலையில், கடந்த சில காலமாக தொடர்ந்து பெய்த மழையால் பருத்தி பயிர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. ஏக்கர் ஒன்றுக்கு 30 முதல் 35 ஆயிரம் வரை செலவு செய்து சாகுபடி மேற்கொண்டு நிலையில், தற்பொழுது செடிகள் மழை நீரால் அழுகி வருகிறது. இதனால், அரசு வேளாண் துறை அலுவலர்களை பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி