சிலிண்டர் விலை ரூ.400 உயரும் - எச்சரிக்கும் ஆர்.எஸ்.பாரதி

85பார்த்தது
சிலிண்டர் விலை ரூ.400 உயரும் - எச்சரிக்கும் ஆர்.எஸ்.பாரதி
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பு குறித்து விமர்சித்துள்ள திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, "இன்னும் பத்து நாட்களுக்குள் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில் இந்த விலை குறைப்பு வந்துள்ளது. தேர்தலுக்காகவே இந்த அறிவிப்பை பாஜக அரசு வெளியிட்டுள்ளது.ஒரு சிலிண்டரின் விலை ரூ.450 ஆக இருந்ததை ரூ.1100 ஆக உயர்த்தியது பாஜக அரசுதான். இப்போது தேர்தலுக்காக 100 ரூபாயை குறைத்தவர்கள் தேர்தலில் வெற்றி பெற்றதும் 400 ரூபாய் வரை உயர்த்தி விடுவார்கள். எனவே மக்கள் மத்திய பாஜக அரசை புறக்கணிக்க வேண்டும்" என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி