விழுப்புரம் நீதிமன்றத்தில் சி.வி.சண்முகம் ஆஜர்

78பார்த்தது
விழுப்புரம் நீதிமன்றத்தில் சி.வி.சண்முகம் ஆஜர்
விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே கடந்த ஆண்டு (2023) ஜூலை 20ஆம் தேதி அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது, தமிழ்நாடு அரசையும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும் விமர்சித்து அவதூறாகப் பேசியதாக கூறப்படுகிறது. இது தொடா்பாக விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் டி.எஸ்.சுப்பிரமணியன் வழக்குத் தொடுத்தார். இந்த நிலையில், இந்த வழக்கு விசாரணை தொடர்பாக இன்று (மே 27) விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ஆஜரானார்.

தொடர்புடைய செய்தி