மாற்றுத்திறன் சிறுமி பலாத்காரம் 'போக்சோ'வில் வாலிபர் கைது

10987பார்த்தது
மாற்றுத்திறன் சிறுமி பலாத்காரம் 'போக்சோ'வில் வாலிபர் கைது
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அருகே 15 வயது மாற்றுத்திறனாளி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். உளுந்துார்பேட்டை தாலுகா கூவாடு பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தன் மகன் தெய்வீகன் (21); கூலித் தொழிலாளி. இவர், 15 வயது பார்வைத் திறன் குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் தெய்வீகன் மீது, உளுந்துார்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி