சிறு பாலம் அமைக்கும் பணியால் மக்கள் மகிழ்ச்சி

63பார்த்தது
சிறு பாலம் அமைக்கும் பணியால் மக்கள் மகிழ்ச்சி
தமிழக விவசாயிகள் மக்கள் கட்சி சார்பாக கடந்த ஓர் ஆண்டுக்கு முன்பு 05-07-2023 அன்று கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் மங்களூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சிறுமுளை கிராமத்தில் அருந்ததியர் பொதுமக்கள் வழிப்படும் மதுரை வீரன் கோவிலுக்கு செல்லும் வழியில் சிறுபாலம் அமைக்க வலியுறுத்தியும் மற்றும் சாலை அமைத்து தர வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த நிலையில் தற்போது பாலம் கட்டுமான பணி நடைபெறுகிறது.

இதனை தமிழக விவசாயிகள் மக்கள் கட்சி மற்றும் சிறுமுளை கிராம அருந்ததியர் பொதுமக்கள் வரவேற்கிறோம் என்றும் மக்கள் கோரிக்கைக்கு மதிப்பளித்த ஊராட்சி நிர்வாகத்திற்கும் மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம் என தமிழக விவசாயிகள் மக்கள் கட்சி தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி