மக்களுடன் முதல்வர்-ஊரகம் சிறப்புத் திட்டத்ம் துவக்கம்.

57பார்த்தது
மக்களுடன் முதல்வர்-ஊரகம் சிறப்புத் திட்டத்ம் துவக்கம்.
தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் மக்களுடன் முதல்வர்-ஊரகம் சிறப்புத் திட்டத்தை துவக்கி வைத்ததை தொடர்ந்து, கடலூர் மாவட்டம், விருத்தாசலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆலடி தனிஷ்கா திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி. வெ கணேசன் மக்களுடன் முதல்வர்-ஊரகம் திட்டத்தை துவக்கி வைத்து, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். அ. அருண் தம்புராஜ், இ. ஆ. ப. , அவர்கள், கடலூர் பாராளுமன்ற உறுப்பினர் திரு. எம். கே. விஷ்ணு பிரசாத் அவர்கள், நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் திரு. சபா. இராஜேந்திரன் அவர்கள், கடலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. கோ. ஐயப்பன் அவர்கள், விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் திரு. எம். ஆர். இராதா கிருஷ்ணன் அவர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி