கொடூரம்! காதலித்து ஏமாற்றிய வாலிபர்

2925பார்த்தது
ஆறு வருடமாக காதலித்து பலமுறை உல்லாசம் அனுபவித்து திருமணம் செய்ய மறுத்த நபர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார். கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம் திருப்பெயர் கிராமத்தைச் சேர்ந்த பவிநந்த்-23 /0 முருகானந்தம் மேற்படி நபர் அதே கிராமத்தைச் சேர்ந்த பவானி -20 , S/0 பழனிவேல் என்பவரை கடந்த ஆறு ஆண்டுகளாக காதலித்து பலமுறை உல்லாசம் அனுபவித்து தற்போது திருமணம் செய்ய மறுத்துள்ளார்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர்கள் திட்டக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தமிழ்ச்செல்வி விசாரணை செய்து நேற்று 04. 04. 2024 ஆம் தேதி வேப்பூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

வழக்கின் எதிரி காவல் நிலையத்தில் கஸ்டடியாக உள்ளார். மேலும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்க உள்ளார்கள்.

தொடர்புடைய செய்தி