வேப்பூரில் இஞ்சின் வெப்பத்தினால் தீப்பிடித்து எரிந்த கார்

532பார்த்தது
கடலூர் மாவட்டம் வேப்பூர் நான்கு முனை சந்திப்பில் கள்ளக்குறிச்சி மாவட்டம் பழனிசாமி (53), என்பவர் நேற்று (ஜூன் 10) மதியம் பாலி - உளுந்தூர்பேட்டை, சாலையில் தனது காரில் மனைவி அஞ்சலை என்பவருடன் பயணித்துக்கொண்டிருந்தார். காரை சாமிநாதன் என்பவர் ஓட்டினார்.

பழனிசாமி காஞ்சிராங்குளத்தில் உள்ள தனது உறவினர் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்று கொண்டிருக்தார். அப்போது வேப்பூர் நான்கு முனை சந்திப்பில் நிகழ்ச்சிக்கு தேவையான கடையில் சாமான்கள் வாங்க காரை நிறுத்திவிட்டு கடைக்குச் சென்றார். அந்த நேரத்தில் கார் என்ஜின் வெப்பத்தினால் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

இதில் யாருக்கும் காயங்கள் இல்லை வேப்பூர் தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர் இதனால் வேப்பூர் நான்கு முனை சந்திப்பில் சற்று பரபரப்பாக காணப்பட்டது.

தொடர்புடைய செய்தி