திட்டக்குடியில் ஓடும் அரசு பேருந்தில் பிறந்த குழந்தை!

540பார்த்தது
கடலூர் மாவட்டம் திட்டக்குடியிலிருந்து தடம் எண் 173 கொண்ட அரசு பேருந்து சென்னை நோக்கி சென்றுக் கொண்டிருந்தது. கொரக்கவாடி பேருந்து நிறுத்ததில் அதே கிராமத்தை சேர்ந்த காசியம்மாள்(வயது 25) என்ற கர்ப்பிணி பெண் மங்களூர் அரசு மருத்துவமனைக்கு செல்வதற்காக பேருந்தில் ஏறியுள்ளார். பேருந்து லட்சுமனாபுரம் வழியாக சென்றுகொண்டிருந்தபோது காசியம்மாளுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

இதைடுதது மா. கொத்தனூர் அருகில் செல்லும் போது பேருந்திலேயே பிரசவம் ஆனது. ஓட்டுனர் ராஜமாணிக்கம், நடத்துனர் வெங்கடாச்சலம் இவர்களின் சமர்த்தியத்தால் தாயும் சேயும் நலமாக இருந்தனர். பின் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தாயையும், சேயையும் மங்களூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஓட்டுநர், நடத்துனர் மற்றும் ஆம்புலன்ஸ் ஊழியர்களை பொதுமக்கள் பாராட்டி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்தி