கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் பரதன் நேற்று மாலை அகால மரணமடைந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும் துயரமும் அடைந்தேன்.
மிகவும் துடிப்பான இளைஞராக கட்சிப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு கட்சியின் வளர்ச்சிக்காக செயலாற்றி வந்த திரு. பரதன். அவர்களின் இழப்பு கட்சிக்கு பேரிழப்பாகும்.
அவரை இழந்து வாடும் அவரது மனைவி, குழந்தை உள்ளிட்ட குடும்பத்தினர்களுக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் கிருஷ்ணகிரி மாவட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் அனைத்து நிலை பொறுப்பாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் மற்றும் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் எம்எல்ஏ இரங்கல் செய்தி தெரிவித்துள்ளார்.