கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், பண்ருட்டி, சிதம்பரம், புவனகிரி, விருத்தாசலம், திட்டக்குடி, காட்டுமன்னார்கோவில், நெய்வேலி குறிஞ்சிப்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் வானங்கள் மூலம் கலர் கோலமாவு விற்பனை தற்போது சூடு பிடிக்க தொடங்கியது. பொங்கல் பண்டிகை என்பதால் வீடுகளின் வாசலில் வண்ண கோலங்கள் இடுவதற்கு மக்கள் கலர் கோலமாவு வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். ஒரு சிறிய படி 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.