கடலூர் மாவட்டம் நெய்வேலி தெர்மல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மேலகுப்பம் அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு போதை பொருட்கள் தீமைகள் குறித்தும், போக்குவரத்து விதிமுறைகள், சைபர் குற்றங்கள் தடுப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அது மட்டுமல்லாமல் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.