தேசிய ஜனநாயகக் கூட்டணியில் கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான் நெய்வேலி அடுத்த இந்திராநகர் ஊராட்சியில் பாரதி நகரில் மாம்பழம் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இது மட்டும் இல்லாமல் அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார் தங்கர் பச்சான். இதனால் அவரை சுற்றி கூட்டம் கூடியது. அவர் பேசியதையும் மக்கள் ஆர்வமுடன கேட்டனர்.