
கடலூர்: மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம்
கடலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S ஜெயக்குமார் IPS அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், சரித்திர பதிவேடு குற்றவாளிகளின் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும், சரித்திர பதிவேடு குற்றவாளிகளால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை உருவாகலாம் என தெரிந்தால் அவர்கள் மீது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். போதைப்பொருட்கள் கஞ்சா மற்றும் குட்கா நடமாடத்தை முற்றிலுமாக தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், தொடர் குற்ற செயலில் ஈடுபடுவோர் குண்டர் தடுப்பு காவலில் கைது செய்ய வேண்டும் என அறிவுரை வழங்கினார். புதுவை மாநில மதுபானங்கள் கடலூர் மாவட்டத்திற்கு வராமல் தடுக்க மதுவிலக்கு சோதனை சாவடிகளில் தீவிரமாக சோதனை மேற்கொள்ள வேண்டும் எனவும், மதுபானங்கள் கடத்தி வருவோர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினார். இக்கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் நல்லதுரை, ரகுபதி மற்றும் கடலூர் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றனர்.