சிதம்பரத்தில் பால் கடையில் திருட்டு சம்பவம்

54பார்த்தது
சிதம்பரத்தில் பால் கடையில் திருட்டு சம்பவம்
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கீழ்அனுப்பம்பட்டு கிராமத்தை சேர்ந்த தட்சிணாமூர்த்தி மகன் தீபன் சிதம்பரம் வண்டி கேட்டில் பால் கடை நடத்தி வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்ததும் தீபன் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார் நேற்று காலை வந்து பார்த்தபோது கடையின் ஷட்டர் பூட்டுகள் உடைக்கப்பட்டு இருந்தது. கல்லா பெட்டியில் இருந்த ரூபாய் 15 ஆயிரத்து 600-ஐ காணவில்லை. நள்ளிரவில் மர்மநபர்கள் பால் கடை பூட்டை உடைத்து உள்ளே சென்று பணத்தை திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. இது குறித்து தீபன் கொடுத்த புகாரின் பேரில் சிதம்பரம் நகர காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி