இருசக்கர வாகனத்தை திருடியவர் கைது

1880பார்த்தது
இருசக்கர வாகனத்தை திருடியவர் கைது
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அம்மாபேட்டை பகுதியில் அண்ணாமலை நகர் காவல் துறையினர் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வாகனத்தில் வந்த ஒருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில் சிதம்பரம் அடுத்த கீழ மூங்கிலடி. தையாக்குப்பம் பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் பிரபாகரன் என்பதும் அவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் அம்மாபேட்டையை சேர்ந்த அருண்குமார் என்பவருக்கு சொந்தமானது என்பதும் தெரியவந்தது. அந்த இருசக்கர வாகனத்தை திருடியதை பிரபாகரன் ஒப்புக் கொண்டார். அதனை தொடர்ந்து அண்ணாமலை நகர் காவல் துறையினர் திருடப்பட்ட இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து பிரபாகரனை கைது செய்தனர்‌‌.

தொடர்புடைய செய்தி