கடலூர் மாவட்டம் புவனகிரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சேத்தியாத்தோப்பு அடுத்த பூதங்குடி ஊராட்சியில் உள்ள அள்ளூர் கிராமத்தில் புதிய பயணிகள் நிழற்குடையை புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் எம்எல்ஏ திறந்து வைத்தார். உடன் ஊர் பொதுமக்கள் மற்றும் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.