கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் வாரம் தோறும் திங்கள்கிழமை நடைபெறுவது வழக்கம்.
இந்த நிலையில் நேற்று பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில் மொத்தம் 404 மனுக்கள் பெறப்பட்ட நிலையில் இதன் மீது விசாரணை நடத்தி தீா்வு காண அதிகாரிகளுக்கு கடலூர் மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் உத்தரவிட்டார்.