சேத்தியாத்தோப்பு: அடிக்கடி தகராறு; பெண் தூக்கிட்டு தற்கொலை

594பார்த்தது
சேத்தியாத்தோப்பு: அடிக்கடி தகராறு; பெண் தூக்கிட்டு தற்கொலை
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே மேல் வளையமாதேவி கிராமத்தைச் சேர்ந்த முத்துலட்சுமி இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது. இந்த நிலையில் அவரது கணவர் சந்தோஷ்குமார் வேலைக்கு செல்லாமல் குடிபோதையில் மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான முத்துலட்சுமி வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சேத்தியாத்தோப்பு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி