சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடக்கம்!

85பார்த்தது
சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடக்கம்!
அருணாச்சலப்பிரதேசம், சிக்கிம் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (ஜுன் 2) தொடங்கியுள்ளது. அருணாச்சலப்பிரதேசம், சிக்கிம் மாநிலங்களில் பேரவையின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடையும் நிலையில், முன்கூட்டியே வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. அருணாச்சலப்பிரதேசத்தில் 50 தொகுதிகளில் பதிவான தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. 10 தொகுதிகளில் ஏற்கனவே பாஜக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வாகி உள்ளனர். அதே போல் சிக்கிமில் 32 தொகுதிகளில் பதிவான தபால் வாக்குகளும் தற்போது எண்ணப்பட்டு வருகின்றன. இரு மாநிலங்களிலும் மக்களவைக்கு பதிவான வாக்குகள் நாளை மறுநாள் (ஜுன் 4) எண்ணப்படவுள்ளது.

தொடர்புடைய செய்தி