தக்காளி, வெங்காயம், பூண்டு, பீன்ஸ் போன்ற காய்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் காரணத்தால் நடுத்தர குடும்பங்களில் காய்கறிகள் வாங்கும் எண்ணிக்கை குறைந்துள்ளதாக கிரிஸில் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. காய்கறிகள் இல்லாமல் உணவுகளை வீட்டில் சமைப்பது அதிகரித்து இருப்பதாகவும், மக்களின் வாங்கும் திறன் குறைந்து, பொருட்களின் விலை ஏறிக்கொண்டே இருப்பது தான் இதற்கு முக்கிய காரணம் என்றும் கூறப்பட்டுள்ளது.