தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால் நாடாளுமன்ற பிரதிநித்துவத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், முடிவுகள் குறித்தும் கூட்டு நடவடிக்கைக் குழு அமைப்பது தொடர்பாக வரும் 22ம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடத்த 7 மாநிலங்களைச் சேர்ந்த முதலமைச்சர்கள் முன்னாள் முதலமைச்சர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். முதலமைச்சர்கள் மம்தா பானர்ஜி, ரேவந்த் ரெட்டி, சித்தராமையா, பினராயி விஜயன், பக்வத்சிங் மான், சந்திரபாபு நாயுடு ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளார்.