காங்கிரஸின் சாம் பிட்ரோடா ராஜினாமா

82பார்த்தது
காங்கிரஸின் சாம் பிட்ரோடா ராஜினாமா
இந்தியர்கள் குறித்து வெளிநாட்டுவர்களுடன் தொடர்பு படுத்தி பேசிய நிலையில் காங்கிரஸ் கட்சியின் அயலக பிரிவு பொறுப்பு வகித்த சாம் பிட்ரோடா ராஜினாமா செய்தார். தென்னிந்தியர்கள் ஆப்ரிக்கர்கள் போல உள்ளனர் என்றும் வட இந்தியர்கள் வெள்ளையர்களை போல் உள்ளதாகவும், கிழக்கு இந்தியர்கள் சீனர்களை போல் உள்ளதாகவும், மேற்கு இந்தியர்கள் அரேபியர்களை போல் உள்ளதாகவும் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. அவரது பேச்சிற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் ராஜினாமா செய்துள்ளார்.

தொடர்புடைய செய்தி