உதயநிதி ஸ்டாலினுக்கு நிபந்தனை ஜாமீன்!

8679பார்த்தது
உதயநிதி ஸ்டாலினுக்கு நிபந்தனை ஜாமீன்!
சனாதன தர்மத்திற்கு எதிராக கருத்து தெரிவித்த வழக்கில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. சனாதனத்தை ஒழிப்போம் என்று பேசிய உதயநிதி இன்று பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார். ஏற்கனவே 2 முறை ஆஜராக உத்தரவிட்டிருந்த நிலையில் ஆஜராகாமல் இருந்தார். இன்றும் ஆஜராகாவிட்டால் பிடிவாரண்ட் பிறப்பிக்க வாய்ப்பு உள்ளது என்பதால் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். இந்த நிலையில், நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல் ரூ.1 லட்சம் பிணைத்தொகை செலுத்தவும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இந்த வழக்கு வருகிற ஆகஸ்ட் 8ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி