சிறுவாணி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மீண்டும் மழைப்பொழிவு காணப்படுகிறது. இன்று (அக்.,1) காலை 8: 00 மணி நிலவரப்படி அணையில் 18 மி. மீ மழை பதிவாகியிருந்தது. நீர் மட்டம் 40. 70 அடியாக இருக்கிறது. குடிநீர் தேவைக்காக, 9. 73 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு, கோவை மாநகராட்சி மற்றும் வழியோர கிராம மக்களுக்கு வினியோகிக்கப்பட்டது. கோவை மாவட்ட பகுதிகளில் இன்றும் (அக். , 1) மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக, வானிலை மையம் அறிவித்திருக்கிறது.