பெட்டிக்கடைக்காரரிடம் பண கேட்டு மிரட்டிய வாலிபர் கைது

75பார்த்தது
பெட்டிக்கடைக்காரரிடம் பண கேட்டு மிரட்டிய வாலிபர் கைது
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையை சேர்ந்தவர் காட்டுராஜா(44). இவர் கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் தங்கி பெட்டிக்கடை நடத்தி வருகிறார். நேற்று காட்டுராஜா தனதூ நண்பர் ஒருவரை சந்திக்க ஒண்டிப்புதூர் பாலம் அருகே நடந்து சென்றார். அப்போது அவரை வழிமறித்த வாலிபர் ஒருவர் பணம் கேட்டார். அவர் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர், நான் ரவுடி காமாட்சிபுரம் கார்த்தியின் உறவினர் என கூறி கத்தியை காட்டி மிரட்டி விட்டு சென்றார். இது குறித்து காட்டுராஜா சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், பணம் கேட்டு மிரட்டியது காமாட்சிபுரம் நொய்யல் தெருவை சேர்ந்த நித்தியானந்தம்(20) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி