பஸ்சில் பெண்ணிடம் 3 பவுன் நகை பறிப்பு

82பார்த்தது
பஸ்சில் பெண்ணிடம் 3 பவுன் நகை பறிப்பு
கோவை உக்கடம் ஜி. எம் நகரை சேர்ந்தவர் மேரி(53). இவர் காந்திபுரத்தில் உள்ள ஒரு அலுவலகத்தில் கிளீனிங் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று மேரி வேலைக்கு செல்வதற்காக பஸ்சில் சென்றார். அப்போது பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர் அவரது கழுத்தில் கிடந்த 3 1/4 பவுன் தங்க செயினை பறித்து சென்று விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த மேரி இது குறித்து ஆர். எஸ். புரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி