திருமணம் நடக்க இருந்த மணப்பெண் 'திடீர்' மாயம்; சோகம்

61பார்த்தது
திருமணம் நடக்க இருந்த மணப்பெண் 'திடீர்' மாயம்; சோகம்
கோவை சேரன் மாநகரை சேர்ந்தவர் 28 வயது பெண். தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் திருமணம் நிச்சயக்கப்பட்டது. இன்று (12ம் தேதி) அவர்களுக்கு திருமணம் நடைபெற இருந்தது. முன்னதாக இரு வீட்டு பெற்றோரும் பத்திரிகை அடித்து, மண்டபம் புக் செய்து திருமணத்திற்கான ஏற்பாடுகளை விமர்சியாக செய்து வந்தனர். இந்தநிலையில் கடந்த 9ம் தேதி மணப்பெண் வீட்டில் இருந்து அவரது பெற்றோரிடம் கடைக்கு சென்று விட்டு வருவதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் அவரது செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றனர். ஆனால் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. உறவினர்கள் அல்லது தோழி வீட்டுக்கு சென்றிருக்கலாம் என்ற விசாரித்து பார்த்தனர். ஆனால் அவர் எங்கு சென்றார் என்ற விவரம் தெரியவில்லை. இதனால் இன்று நடைபெற இருந்த திருமணம் நின்று போனது. இதனால் அந்த பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சோகமடைந்தனர. இது குறித்து பீளமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மணப்பெண்ணை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி