டாஸ்மாக் கடையில் தகராறு எலக்ட்ரீசியன் பலி ; ஒருவர் கைது

59பார்த்தது
டாஸ்மாக் கடையில் தகராறு எலக்ட்ரீசியன் பலி ; ஒருவர் கைது
கோவையில் டாஸ்மாக் கடையில் ஏற்பட்ட தகராறில் கீழே விழுந்த எலக்ட்ரீசியன் தலையில் அடிபட்டு பலியானார்.
கோவை கோயில்மேடு பகுதியை சேர்ந்தவர் சேகர்(54). எலக்ட்ரீசியன். இவர் நேற்று தனது நண்பர் ஒருவருடன் வெள்ளலூர் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது அருந்த சென்றார். அப்போது அங்கிருந்த சிலருக்கும், சேகருக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த 2 பேர் சேகரை தகாத வார்த்தைகளால் பேசி கன்னத்தில் அறைந்து கீழே தள்ளினர். அவர் கீழே விழுந்ததில், பின்னந்தலை கல் மீது பட்டதில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அங்கிருந்தவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அவரை பரிசோதித்த போது அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. தகவல் அறிந்து வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சிங்காநல்லூர் போலீசார் கனகராஜ் மற்றும் முனுசாமி ஆகிய இருவர் மீது வழக்குபதிவு செய்தனர். இவர்களில் கனகராஜ் கைது செய்யப்பட்டார். இருவர் மீதும் கொலைக்குற்றம் ஆகாத மரணத்தை விளைவித்தல் (304) என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்தி