ரோட்டரி 3201 மாவட்டத்தின் புதிய ஆளுநர் தேர்வு

65பார்த்தது
ரோட்டரி 3201 மாவட்டத்தின் 2024-25 ஆண்டுக்கான புதிய ஆளுநராக கோவையை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் சுந்தரவடிவேலு தேர்வு செய்யப்பட்டுள்ளார். வரும் ஜூலை 1 ஆம் தேதி அவர் பதவி ஏற்க உள்ள நிலையில், வரும் ஆண்டில் தமது செயல்பாடுகள் குறித்து,
செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில்,
கோவை, பாலக்காடு, திருச்சூர், எர்ணாகுளம், கொச்சின், மூவாட்டுபுழா மற்றும் இடுக்கி ஆகிய மாவட்டங்களில் உள்ள 176 ரோட்டரி சங்கங்களின் கூட்டு அமைப்பான 3201 மாவட்ட ஆளுநராக தாம், பொறுப்பேற்க உள்ள விழாவில், இந்த 176 ரோட்டரி சங்கங்களின் பிரதிநிதிகள், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள ரோட்டரி சங்க பிரதிநிதிகள், முக்கிய பிரமுகர்கள், கலந்து கொள்ள உள்ளதாக கூறினார். சேவை திட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்த உள்ளதாக கூறிய அவர், குறிப்பாக, நீலகிரி மாவட்டத்தில் உள்ள தோடர் இன மலைவாழ் மக்களுக்கு இலவசமாக வீடு கட்டி தருவது, கொங்கு மண்டலத்திற்கு முக்கிய நீராதாரமான கோவையில் உள்ள கெளசிகா நதி வழித்தடத்தை மீட்டு எடுத்தல், அடுத்த வளர்ந்து வரும் தொழில் நுட்பத்தில் சைபர் கிரைம் குற்றங்கள் மாணவர்களுக்கு விழிப்புணர்வு, போன்ற திட்டங்களை ரோட்டரி சங்க உறுப்பினர்களுடன் இணைந்து தொடர உள்ளதாக அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி