இந்து முன்னணி நிர்வாகி மீது வழக்குப்பதிவு

50பார்த்தது
இந்து முன்னணி நிர்வாகி மீது வழக்குப்பதிவு
சமூக வலைதளமான பேஸ்புக், இன்ஸ்டா உள்ளிட்டவற்றில் யாரேனும் இரு சமூகம், மதத்தினரிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் கருத்துகளை பதிவிடுகின்றனரா? என போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில், வெரைட்டிஹால் ரோடு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபாலன் நேற்று சமூக வலை தள பக்கங்களை கண்காணித்தார். அப்போது இந்து முன்னணி கோவை நகர செயலாளர் ஜெய்சங்கர் என்பவரது பேஸ்புக் பக்கத்தில் கோயில் இடிப்பு சம்பந்தமாகவும், அரசை விமர்சிக்கும் விதமாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகளை பதிவிட்டிருந்தார். இது குறித்து ஜெயபாலன் வெரைட்டிஹால் ரோடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் ஜெய்சங்கர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி