அதிவேக வாகனம் ஓட்டிய 17 பேர் மீது வழக்குப் பதிவு!

67பார்த்தது
அதிவேக வாகனம் ஓட்டிய 17 பேர் மீது வழக்குப் பதிவு!
கோவை மாநகரப் பகுதியில் விபத்துகளைத் தடுக்க போலீஸார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கோவை அவிநாசி சாலை மற்றும் ரேஸ்கோர்ஸ் பகுதிகளில் இளைஞர்கள் இருசக்கர வாகனங்களை அதிகவேகமாக ஓட்டுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட போக்குவரத்து போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி, அவிநாசி சாலை மற்றும் ரேஸ்கோர்ஸ் பகுதிகளில் போலீஸார் செப்டம்பர் 6 அன்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின் போது, இருசக்கர வாகனங்களில் அதிவேகமாக வந்த 17 இளைஞர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், 5 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து போக்குவரத்து போலீஸார் கூறுகையில், இந்த சோதனை தொடர்ந்து நடைபெறும். கோவை மாநகரில் நிர்ணயிக்கப்பட்ட வேகத்தில் மட்டுமே வாகனங்களை இயக்க வேண்டும். மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்என்று எச்சரித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி