விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்திக்க மாட்டேன் -அண்ணாமலை

542பார்த்தது
விமான நிலையத்தில் இனி என் வாழ்வில் செய்தியாளர்களை சந்திக்க மாட்டேன் -
கோவையில் பா. ஜ. க. தலைவர் அண்ணாமலை தகவல்.

டெல்லியில் இருந்து விமானம் மூலமாக தமிழக பா. ஜ. க. தலைவர் அண்ணாமலை கோவை வருவதாக வந்த தகவலை அடுத்து செய்தியாளர்கள் கோவை விமான நிலையத்தில் அண்ணாமலையின் பேட்டிக்காக காத்திருந்தனர். இந்நிலையில் விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பை தவிர்த்து சென்றார்.

இந்நலையில் பின் தொடர்ந்து சென்ற செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை 'இனி என் வாழ்வில் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்திக்க மாட்டேன் செய்தியாளர் சந்திப்பு எல்லாம் கட்சி அலுவலகத்தில் தான் நடைபெறும், நான் மட்டுமல்ல பாஜக"வில் யாரும் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்திக்க மாட்டார்கள் செய்தியாளர்கள் சந்திப்பு எல்லாம் முறையாக கட்சி அலுவலகத்தில் தான் நடைபெறும். செய்தியாளர் சந்திப்பு குறித்த மாவட்ட தலைவர் முறையாக தகவல் தருவார்' என தெரிவித்து சென்றார்.

சிறிது நேரத்தில் பா. ஜ. க. மாவட்ட நிர்வாகம் நாளை செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற அழைப்பு விடுத்துள்ளது குறிப்படதக்கது.

தொடர்புடைய செய்தி