பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தாமல் இயக்கிய அரசுப் பேருந்து

82பார்த்தது
பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தாமல் இயக்கிய அரசுப் பேருந்து ஓட்டுநர்: கோவையில் அவதி அடைந்த கல்லூரி மாணவர்.

கோவை அவிநாசி சாலையில் பல்வேறு கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கல்லூரி மாணவர் ஒருவர் காந்திபுரம் நகரப் பேருந்து நிலையத்தில் இருந்து பீளமேடு பகுதியில் உள்ள கல்லூரிக்கு செல்ல சிங்காநல்லூர் செல்லும் 140 எண் கொண்ட TN 38 N 3646 என்ற அரசு சொகுசு பேருந்து பயணம் செய்தார். பேருந்தில் பயணிகள் எண்ணிக்கை குறைவாக இருக்கையில் காலியாக இருந்தது. இந்நிலையில் பீளமேடு பகுதி வந்த போது அந்த மாணவர் எழுந்து சென்று ஓட்டுனர் அருகே உள்ள கதவு வழியாக இறங்குவதற்கு நின்று கொண்டு இருந்தார். அப்பொழுது அவர் நின்று கொண்டு இருப்பதை ஓட்டுநர் கண்ணாடியை பார்த்தும் பாக்காதது போல் நிறுத்தத்தில் நிற்காமல் பேருந்த இயக்கினார். பதறிய மாணவர் ஓட்டுனரிடம் நான் இறங்கும் நிறுத்தம் சென்று விட்டது என கூறினார். அதற்கு முதலில் என்னிடம் கூறியிருக்க வேண்டும் என்று முகத்தை சுளித்தவாறு பேருந்தை இயக்கிக் கொண்டு வேறு நிறுத்தத்தில் நிறுத்தினார். இதனால் அவசர, அவசரமாக கீழே இறங்கி மாணவர் நடந்து சென்றார்

தொடர்புடைய செய்தி