முழு கொள்ளளவை எட்டியது பரம்பிக்குளம் அணை!

78பார்த்தது
முழு கொள்ளளவை எட்டியது பரம்பிக்குளம் அணை!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே கேரள வனப்பகுதியில் அமைந்துள்ள பரம்பிக்குளம் அணை முழு கொள்ளளவை எட்டியது. இதனையடுத்து, மூன்று மதகுகள் வழியாக உபரி நீர் வெளியேற்றப்பட்டது. பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தின் முக்கிய நீர்த்தேக்கமான இந்த அணை 72 அடி உயரமும், 17 டி. எம். சி. மொத்த நீர்க் கொள்ளளவும் கொண்டது. நேற்று அணையின் நீர்மட்டம் 71. 78 அடியாக உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு 4, 600 கனஅடி நீர் வரத்து இருந்த நிலையில், அணையின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு வினாடிக்கு 3, 600 கனஅடி நீர் மூன்று மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டது. அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ள நிலையில், பி. ஏ. பி. திட்ட கண்காணிப்பு பொறியாளர் கார்த்திக்கேயன், பரம்பிக்குளம் அணை செயற்பொறியாளர் சிவக்குமார், உதவி செயற்பொறியாளர் ஜெயக்குமார், உதவி பொறியாளர்கள் தியாகராஜன் மற்றும் சங்கீதா ஆகியோர் அணையின் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். கடந்த வாரம் புதுப்பிக்கப்பட்ட மதகுகள் வழியாக சோதனை ஓட்டமாக நீர் வெளியேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால், தொடர்ந்து உபரி நீர் வெளியேற்றம் மேற்கொள்ளப்படுகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி