மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

74பார்த்தது
கள்ளக்குறிச்சி விஷச் சாராய மரணங்களை கண்டித்து கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!
கோவை சிவானந்தா காலனி பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட குழு சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆறுச்சாமி தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே. எஸ் கனகராஜ் முன்னிலை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் யூ. கே. சிவஞானம், மாவட்ட செயலாளர் சி. பத்மநாபன் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு கள்ளச்சாராய உயிரிழப்புகளை கண்டித்தும், கள்ள சாராயம் உள்ளிட்ட போதைப்பொருள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழித்திட வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினர்.

தொடர்புடைய செய்தி