கல்லூரியில் வெளி ஆட்களை வர வைத்து மாணவர்கள் மீது தாக்குதல்

555பார்த்தது
கோவை எஸ். என். எஸ் கல்லூரியில் மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் வெளி ஆட்களை அழைத்து வந்து தாக்குதல் நடத்தப்பட்ட சமபவத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கல்லூரி மாணவர்களை தாக்கியது கோவை கொண்டயம்பாளையம் லட்சுமி கார்டன் பகுதியில் சேர்ந்த பிரதீப், வரதரயங்கா பாளையம் ஜெர்மன் ராகேஷ், காபி கடை பகுதியைச் சேர்ந்த சந்தோஷ், அன்னூர் கணேசபுரம் ராகுல், தீபக் மற்றும் 17 வயது சிறுவன் என்பது தெரிய வந்தது.

போலீசார் அவர்களை கைது செய்தனர். மேலும் ஒரு கார், இரண்டு மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி